• June 7, 2025

கேரளாவுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.5 கோடி நிதி உதவி; மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

 கேரளாவுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.5 கோடி நிதி உதவி; மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

கேரளாவில் நிலச்சரிவால் ஏற்பட்டுள்ள உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவு சம்பவத்தில் உயிர்கள் பறிபோன செய்தி அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன்; முழுவீச்சில் நடைபெற்று வரும் மீட்புப் பணிகள் நிலச்சரிவில் சிக்கி உள்ளவர் அனைவரையும் மீட்கும் என நம்புகிறேன்;

 இந்த நெருக்கடியான நேரத்தில் நமது சகோதர மாநிலமான கேரளாவிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.

இதை தொடர்ந்து நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.5 கோடி நிதியுதவி அளிக்கப்படும் என்று  முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.

நிலச்சரிவு பாதிப்பு, மீட்பு பணிகள் குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் தொலைபேசியில் கேட்டறிந்தேன் என்று கூறி இருக்கும் முதல் அமைச்சர் ஸ்டாலின், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குத் தேவையான உதவிகளை தமிழ்நாடு அரசின் சார்பில் வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.

மேலும் தமிழ்நாட்டில் இருந்து தீயணைப்பு வீரர்கள், மருத்துவர்கள் அடங்கிய குழு கேரளா சென்றுள்ளது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *