`ஓட்டப்பிடாரத்தில் வட்டார கல்வி அலுவலகம்’- சட்டசபையில் எம்.சி. சண்முகையா வலியுறுத்தல்

தமிழக சட்டசபையில் இன்று காலை பல்வேறு துறைகளின் மீதான மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம் சி.சண்முகையா (திமுக) பேசியதாவது:-
ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சவலாப்பேரி அரசு மேல்நிலைப்பள்ளி ,செக்காரக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி, தருவைக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் ஒட்டப்பிடாரம் வ உ சி அரசு மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில் புதிய கட்டிட வசதிகள் அமைத்து தரவேண்டும்.
ஓட்டபிடாரம் பகுதியில் 139 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. எனவே ஒட்டபிடாரத்தில் புதிய வட்டார கல்வி அலுவலகம் அமைத்து தரவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதற்கு அமைச்சர் அன்பில் பொய்யாமொழி பதில் அளிக்கும்போது, “உறுப்பினர் சண்முகையா விடுத்துள்ள கோரிக்கை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்: என்றார்
