அதிமுகவின் விலையில்லா தேநீரகம் திறந்ததற்கும் , விஜய் பிறந்தநாளுக்கும் சம்பந்தமில்லை- டி.ஜெயக்குமார்

முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் வட சென்னையில் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் மகப்பேறு மருத்துவமனை அருகில் விலையில்லா தேநீரகத்தை முன்னாள் அமைச்சர் விஜயகுமார் திறந்து வைத்ததார்.
பின்பு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது :-
தமிழகம் முழுவதும் சார்பில் அதிமுகவினர் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது, கோடைகாலம் முடிந்து கொஞ்சம் கிளைமேட் மாறி இருக்கிறது. இதனால் மக்களுக்கு டீ, காபி கொடுக்கும் வகையில், வட சென்னையில் விலையில்லா தேநீரகம் திறந்து வைக்கப்படுகிறது.
48வது வட்ட கழக செயலளார் ஆறுமுகம் ஏற்பாட்டில், தினந்தோறும் மாலை காபி, டீ சாப்பிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. யார் வேண்டுமானாலும் இங்கு வந்து இலவசமாக டீ, காபி சாப்பிட்டு கொள்ளலாம்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். திரைப்பட துறையில் மட்டும் இன்றி, மக்களுக்கு தேவையான உதவிகளையும் செய்ய வேண்டும் என்ற வகையில் அவருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
மக்களிடம் டிக்கெட்டுக்கு 200 ரூபாய் வாங்கி சம்பாதிக்கும் நடிகர்கள், மக்கள் பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்க யோசிக்கிறார்கள். நான் ஒரு ட்வீட் போட்டேன். அந்த ட்வீட்டை பார்த்து இருப்பீர்கள். அதற்கு பிறகு தான் ஒவ்வொருவராக விழித்துக்கொண்டு குரல் கொடுத்து வருகிறார்கள்.
எதற்கெடுத்தாலும் எங்கள் ஆட்சியை பற்றி பேசிய அமீர் தற்போது வரை குரல் கொடுக்கவில்லை. அவர் எங்கே போனார் என்று தெரியவில்லை. அடிக்கடி திமுக எழுதி கொடுக்கும் வசனத்தை பேசும் பிரகாஷ் ராஜ் இன்னும் வாய் திறக்கவில்லை.
அந்த வகையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் குரல் கொடுத்ததோடு, நேரில் சென்று பார்த்தது பாராட்டத்தக்கது. விஜய் மட்டுமில்ல யார் இதை செய்திருந்தாலும் பாராட்டுவோம். இதில் உள்நோக்கம் எதுவும் கிடையாது. எனவே விலையில்லா தேநீரகம் திறந்ததற்கும் விஜயின் பிறந்தநாளுக்கும் சம்பந்தமில்லை. அமாவாசைக்கும் அப்துல் காதருக்கும் முடிச்சு போடாதீர்கள்.
கள்ளக்குறிச்சி சம்பவம் மிகப்பெரிய பிரச்சினை. கிட்டத்தட்ட 55 பேர் உயிரிழந்துள்ளனர்.100க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதேபோல் முன்பு விழுப்புரம், செங்கல்பட்டில் கள்ளச்சாராயம் குடித்து 22 பேர் இறந்தார்கள். அன்றைக்கு ஸ்டாலின் நேரில் போனார். ஆனால் இன்றைக்கு ஏன் அங்கு போகவில்லை.
நான் ஓடி ஒளிபவன் இல்லை என்று சவால் விடுபவர் கள்ளக்குறிச்சிக்கு நேரில் சென்றிருக்கலாமே..? ஏன் போகவில்லை..? வெறும் சட்டசபையில் மேஜையை தட்டி சவால் விட்டால் மட்டும் போதுமா?.. இது தமிழ்நாடு மக்களை இழிவுபடுத்தும் செயல் ஆகும்.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.
