இந்தியா -வங்காளதேசம் இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து

இந்தியா -வங்காளதேசம் நாடுகளின் செழுமைக்கான இணைப்பு, வர்த்தகம் மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காகவும், இரு நாடுகள் இடையே நேற்று ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்தியாவின் விக்சித் பாரத் விஷன் 2047 மற்றும் வங்காளதேசத்தின் ⁰ பங்களாதேஷ் விஷன் 2041 ஆகியவற்றை இந்த ஒப்பந்தம் எடுத்துக்காட்டுகிறது.
டெல்லியில் இங்கு நடந்த நிகழ்ச்சியின் போது பிரதமர் நரேந்திர மோடி, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா ஆகியோர் இடையே ஒப்பந்தம் பரிமாறிக் கொள்ளப்பட்டது.
இந்தியா மற்றும் வங்கதேசம் இடையேயான இருதரப்பு பேச்சுவார்த்தையை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வெளியுறவு செயலாளர் வினய் மோகன் குவாத்ரா, இரு நாடுகளும் டிஜிட்டல் கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக கூறினார்.
