• June 8, 2025

மாணவர்களுக்கு காகித மடிப்புகலை பயிற்சி 

 மாணவர்களுக்கு காகித மடிப்புகலை பயிற்சி 

தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் சார்பில் கோவில்பட்டி கி.ரா நினைவரங்கத்தில் நடந்த கலை இலக்கிய கோடை கொண்டாட்ட நிகழ்ச்சியில் 6ம் நாள் மாணவர்களுக்கு காகித மடிப்புகலை பயிற்சி நடந்தது.

இந்நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி நகராட்சி ஆணையாளர் கமலா தலைமை தாங்கினார்.வட்டார கல்வி அலுவலர் முத்தம்மாள்,தொடக்கக் கல்வி உதவித் திட்ட அலுவலர் நாயகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறார் இலக்கிய அமைப்பின் நிர்வாகி ராஜலட்சுமி நாராயணசாமி அனைவரையும் வரவேற்றார்.

தமிழ்நாடு அறிவியல் இயக்க  பயிற்சியாளர் அமல்ராஜ் மாணவ, மாணவிகளுக்கு காகித மடிப்புகலை குறித்து பயிற்சி அளித்தார். கோவில்பட்டி சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் காகித மடிப்புக் கலை பயிற்சி பெற்றனர்.

சிறார் இலக்கிய அமைப்பின் நிர்வாகிகள் மணிமொழி நங்கை,கண்ணகி,முருகேசன் உள்படபலர் கலந்து கொண்டனர். வட்டார வள மைய மேற்பார்வையாளர் நட்டாத்தி நன்றி கூறினார்.

இதற்கான ஏற்பாடுகளை பள்ளிக்கல்வி ஒருங்கிணைப்பாளர் ஜான்சன் சாமுவேல்,சிறார் இலக்கிய அமைப்பின் செயலர் பிரபு ஆகியோர் செய்திருந்தனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *