• June 7, 2025

கோவில்பட்டி முகாமில் இலவச கண் புரை அறுவை சிகிச்சைக்கு 33 பேர் தேர்வு 

 கோவில்பட்டி முகாமில் இலவச கண் புரை அறுவை சிகிச்சைக்கு 33 பேர் தேர்வு 

கோவில்பட்டி   நாடார்உயர்நிலைப்பள்ளி 1974-1977 ம் ஆண்டு பழைய மாணவர்கள் சங்கம் சார்பில் கோவில்பட்டி அரவிந்த் கண் மருத்துவ மனையுடன் இணைந்து   146 வது மாதந்திர இலவச கண் பரிசோதனை முகாம் இன்று( ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.

   கோவில் பட்டி   செயின்ட் பால்ஸ் பள்ளியில் காலை   10 மணி முதல்   மதியம்   2 மணிவரை   நடந்த முகாமுக்கு பழைய மாணவர் சங்க தலைவர்    ஜி.ஜெயராஜ் தலைமை தாங்கினார். செயலாளர்   என் .ராஜவேல் முன்னிலை வகித்தார். முகாம் தொடக்க நிகழ்ச்சி யில் பலரும் கலந்து கொண்டனர்.

முகாமில் 149 பேர் கண் பரிசோதனை செய்து வெளி நோயாளிகளாக சென்றனர் 33 பேருக்கு கண் புரை கண்டுபிடிக்கப்பட்டது.

  கண்புரை நோயாளிகள்  33 பேரும் கோவில்பட்டி அரவிந்த் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.அங்கு அவர்களுக்கு உள்விழி லென்ஸ், அறுவை சிகிச்சை, மருந்து, தங்கும் வசதி,உணவு மற்றும் போக்குவரத்து அனைத்தும் இலவசமாக வழங்கப்படும். அறுவை சிகிச்சை செய்பவர்களுக்கு ஒரு மாதம் கழித்து மறு பரிசோதனை இலவசமாக செய்யப்படுகிறது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *