• June 7, 2025

10 ம் வகுப்பு தேர்வு :சாதனை மாணவர்களுக்கு மகிழ்வோர் மன்றம் சார்பில் விருது 

 10 ம் வகுப்பு தேர்வு :சாதனை மாணவர்களுக்கு மகிழ்வோர் மன்றம் சார்பில் விருது 

கோவில்பட்டி மகிழ்வோர் மன்றத்தின் 79-வது மாதக் கூட்டம், என். கே. மஹாலில் நடைபெற்றது.  நிகழ்ச்சிக்கு கவிஞர் தங்கதுரையரசி தலைமை தாங்கினார்.  கம்பன் கழகத்தின் தலைவர் துரைபாண்டி முன்னிலை வகித்தார். மன்ற காப்பாளர் சேர்மத்துரை  அனைவரையும் வரவேற்றார்.

நடந்து முடிந்த 10-ம் வகுப்பு பொது தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகள் என்.கேசவபிரியா, ஆர். அனுபிரியா, ஏ.பவுன்ராஜா, ஜெ . பிரின்ஸி, பி.கார்த்திகா, பி.ஸ்ரீராம், எஸ் . கவிதர்ஷினி,எம் அனிதா ஆகியோரை மன்ற நிறுவனர், டாக்டர் லதா ஸ்ரீ வெங்கடேஷ் பரிசு வழங்கி பாராட்டினார்.

தொடர்ந்து, 1330 திருக்குறளையும் ஒப்புவித்த, என்.சுப்பையா புரம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி சி. நித்திலாவுக்கு மகிழ்வோர் மன்றத்தின் இளம் சாதனையாளர் விருதும், குறிஞ்சி நாச்சியாருக்கு மகிழ்வோர் மன்றத்தின் ‘வாசிப்பதை நேசிப்பவர்’விருதும் வழங்கி பாராட்டப்பட்டது.

மாணவர்கள் நகைச்சவை துணுக்குகள் கூறினர்.  அதனை தொடர்ந்து இலக்கிய பேச்சாளர்,  முனைவர். விஜயசுந்தரி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, “நான் நிரந்தரமாணவன்” என்னும் தலைப்பில் மகிழ்வுரை வழங்கினார்.

மன்றக் காப்பாளர் மோகன்ராஜ் நன்றி கூறினார்.

கூட்டத்தில் மன்ற இயக்குனர் ஜான்கணேஷ், மன்ற காப்பாளர் செல்வின், தமிழாசிரியர்கள் ராஜசேகர், ஜான்சிராணி, ராதா, ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் அரிச்சந்திரன், சுப்ரமணியபாரதி, விஜயலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *