மருந்து கடை உரிமையாளர் கொலை வழக்கில் 6 பேர் கைது

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அண்ணாநகர் 4வது தெருவைச் சேர்ந்த ஈனமுத்து மகன் செந்தில் ஆறுமுகம் (வயது 32). இவர் நேற்று முன்தினம் (11.05.2024) இரவு அவரது வீட்டருகே மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார்
இந்த கொலை தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் கேல்கர் சுப்ரமண்ய பால்சந்திரா மேற்பார்வையில் தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜாராம் தலைமையிலான போலீசாருக்கு உடனடியாக கைது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
அவரது உத்தரவின் பேரில் மேற்படி போலீசார் விசாரணை மேற்கொண்டதில் கொலையுண்ட செந்தில் ஆறுமுகம் என்பவருக்கும் அவரது தங்கையின் கணவரான நாலாட்டின்புதூர் ஜீவன் காலனியைச் சேர்ந்த கோபிநாத் (37) என்பவருக்கும் சொத்து தொடர்பாக பிரச்சனை இருந்து வந்தது தெரித்தது.
இந்நிலையில் கோபிநாத் நேற்று தூத்துக்குடி லெவிஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த பெரியநாயகம் மகன் சங்கர் (எ) சங்கரலிங்கம் (28), மூக்காண்டி மகன் மணிகண்டன் (26), தூத்துக்குடி சத்யாநகரைச் சேர்ந்த முத்துசாமி மகன் ராம்குமார் (25), தூத்துக்குடி பி அண்ட் டி காலனியைச் சேர்ந்த காட்டுராஜா மகன் தமிழ்செல்வம் (24) மற்றும் தூத்துக்குடி ராஜீவ் நகரைச் சேர்ந்த ஸ்ரீதர் மகன் ஸ்ரீநாத் (22) ஆகியோருடன் சேர்ந்து செந்தில் ஆறுமுகத்தை, அவரது வீட்டருகே வைத்து அவரை தாக்கி கொலை செய்தது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் உடனடியாக 24 மணி நேரத்தில் கோபிநாத், சங்கர் (எ) சங்கரலிங்கம், மணிகண்டன், ராம்குமார், தமிழ்செல்வம் ஸ்ரீநாத் ஆகிய 6 பேரை கைது செய்தனர். மேலும் விசாரணை நடக்கிறது.
