அதிக மதிப்பெண் பெற்ற ஆட்டோ டிரைவர் மகளுக்கு சென்னை கல்லூரியில் இலவச கல்வி

பிளஸ் 2 பொதுத் தேர்வில் 578 மதிப்பெண்கள் எடுத்து சென்னை மாநகராட்சி பள்ளிகளில் முதலிடத்தை ஆட்டோ டிரைவரின் மகள் பூங்கோதை பெற்று சாதனை படைத்தார்.
இதையொட்டி மாணவி பூங்கோதைக்கு சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில் இலவச கல்விக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கல்லூரி சார்பில் 100 சதவீத ஸ்காலர்ஷிப்புடன் இலவசமாக கல்வி பயில்வதற்கான ஆணையை கல்லூரி நிர்வாகக் குழு தலைவர் முரளிதரன் இன்று வழங்கினார்.
இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் முனைவர் உமா கவுரி, துணை முதல்வர் விஜயா ஆகியோர் கலந்து கொண்டனர்.
