• June 8, 2025

சிலம்பம் போட்டியில் தங்கம் வென்ற கோவில்பட்டி கல்லூரி மாணவி 

 சிலம்பம் போட்டியில் தங்கம் வென்ற கோவில்பட்டி கல்லூரி மாணவி 

கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் 6-வது தெருவில் வசித்து வரும்  பிரபாகர் என்பவருடைய மகள் ரொவினா எனும்  மாணவி கே. ஆர் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

இவர் கொச்சியில் மாநில அளவில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்று  முதல் பரிசான தங்கம்  வென்றுள்ளார்.

இவர் தி.மு.க.மாவட்ட துணைச் செயலாளர் ஏஞ்சலாவை சந்தித்து வாழ்த்து பெற்றார் .

மாணவி ரொவினோ 2019 ஆம் ஆண்டு எவரெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்த போது மாவட்ட அளவில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில் கலந்து கொண்டு மூன்றாம் இடத்தையும், புதுச்சேரியில் நடைபெற்ற சிலம்ப போட்டியில் முதல் பரிசையும் பெற்றுள்ளார் .

அடுத்த மாதம் மலேசியாவில்  சர்வதேச அளவில் நடைபெற உள்ள சிலம்ப போட்டியில் கலந்து கொள்ள உள்ளார்.

இவருடன் கொச்சியில் நடைபெற்ற போட்டியில் கலந்து கொண்ட கே.ஆர். கல்லூரி மாணவிகள் கிருத்திகா,வர்ஷா ஆகியோர் தங்கமும், இந்துமதி, அனுஷ்யா ஆகியோர் வெள்ளியும் வென்றுள்ளனர்,

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *