35 தொகுதிகளில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும்- எடப்பாடி பழனிசாமி

மதுரை தொகுதி அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணனை ஆதரித்து அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார்.
மாட்டுத்தாவணி காய்கறி சந்தையில் நேற்று காலை சென்ற எடப்பாடி பழனிசாமி ஒவ்வொரு கடையாக சென்று வாக்கு சேகரித்தார். பெண்களிடம் அதிமுக அரசின் சாதனை குறிப்பு நோட்டீஸ் வழங்கி இரட்டை இல்லை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்.
காய்கறி சந்தைக்கு வந்தவர்க்ளிடமும்டாக்டர் சரவணனுக்கு இரட்டை இல்லை சின்னத்துக்கு வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டார்.
அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி சாதாரண தொண்டன் அதிமுகவில் தலைமை பதவிக்கு வரமுடியும். திமுகவில் வர முடியுமா? என்று கேள்வி எழுப்பினார்.
மேலும் அவர் கூறுகையில் தலைமை பதவிக்கு வாரிசாகவருவது தான் வாரிசு அரசியல். தமிழகத்தில் நடக்க இருக்கும் மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணி 35 இடங்களை வெற்றி பெறும் என்று கூறினார்,
