தூத்துக்குடி தெற்கு மாவட்ட மதிமுக செயலாளர் விலகல்; கோவில்பட்டி ஆர்.எஸ்.ரமேஷ் பொறுப்புகளை கவனிப்பார்

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளர் புதுக்கோட்டை பி. செல்வம் தனது சொந்த காரணங்களுக்காக தாம் வகித்து வந்த பொறுப்பிலிருந்து விலகிக் கொள்கிறார்.
தூத்துக்குடி வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் கோவில்பட்டி ஆர்.எஸ். ரமேஷ் இன்று முதல் தூத்துக்குடி தெற்கு மாவட்டக் கழக நிர்வாகப் பொறுப்புக்களையும் கவனித்துக் கொள்வார்.
மேற்கண்ட தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த ஒன்றிய, நகர, பேரூர்க் கழகச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் திரு. ஆர்.எஸ். ரமேஷ் அவர்களுடன் தொடர்பு கொண்டு கழகப் பணியாற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேற்கண்ட தகவல்களை மதிமுக பொதுசெயலாளர் வைகோ தெரிவித்து இருக்கிறார்.
