அப்பனேரி ஊராட்சியில் வீட்டுவரி வசூல் தீவிரம்

கோவில்பட்டி அருகே உள்ள அப்பனேரி ஊராட்சிக்கு 2023-2024 ம் ஆண்டிற்கு செலுத்தப்பட வேண்டிய வீட்டு வாி, தொழில் வாி, தொழில் உாிமக் கட்டணம் ஆகிய வாியினங்கள் கணினி மயமாக்கப்பட்டுள்ளது.
இதனால் வீட்டுவாி ரசீதில் உள்ளீடு செய்யப்பட்டுள்ள வீட்டு உரிமையாளர் பெயா் , தெருவின் பெயர் தொலைபேசி எண் போன்ற விபரங்கள் சரியாக உள்ளதா? என்பதை சாி பார்த்து வீட்டு வரி ரசீது ஆன்லைனில் செலுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருத்தம் இருப்பின் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் திருத்தம் செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் .இந்த திருத்தம் நடைபெற்று வருகிறது. அப்பனேரி ஊராட்சியில் 2,500 வீடுகளுக்கு மேல் வரி வசூல் செய்யப்படவேண்டும். . இதில் 500 பேர் வரை வீட்டு வரி செலுத்தாமல் உள்ளனர். அவர்களிடம் வரிவசூல் செய்வதில் ஊராட்சி நிர்வாகம் தீவிரமுயற்சி மேற்கொண்டுள்ளது. ஒவ்வொரு பகுதியாக ஆட்டோவில் ஒலிபெருக்கி மூலம் பிரசாரம் செய்யப்பட்டது. தற்போது ஊராட்சி தலைவர் சுரேஷ் உத்தரவின் பேரில் அலுவலக கிளார்க் செல்வராஜ், ஒவ்வொரு வீட்டு வரி செலுத்தாத ஒவ்வொரு குடியிருப்பாளருக்கும் செல்போனில் தொடர்பு கொண்டு வரி செலுத்துமாறு கோரிக்கை விடுத்தது வருகிறார். இதை தொடர்ந்து ஊராட்சி அலுவலகத்துக்கு நேரில் வந்து விபரங்களை சரிபார்த்து வீட்டு வரி செலுத்தி வருகிறார்கள். வீட்டு வாி கணினி மயமாக்கப்பட்டதால் வீடுகளுக்கு சென்று வாி வசூலிக்க இயலாத நிலை உள்ளது . எனவே வீட்டு வாி செலுத்தாத நபா்கள் உடனடியாக செலுத்த வேண்டும். வாி செலுத்தாத வீடுகளுக்கு அபராத தொகையுடன் வீட்டு வாி செலுத்த நோிடும் என்று ஊராட்சிதலைவர் சுரேஷ் கேட்டுக்கொண்டுள்ளார்.
