தூத்துக்குடி, ஈரோடு, ஸ்ரீபெரும்புதூர் தொகுதிகளில் த.மா.கா. போட்டி

நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமாகா கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது 3 தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு இரு கட்சி தலைவர்களும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இதை தொடர்ந்து தமாகா தலைவர் ஜி.கே.வாசன் இன்று 3 தொகுதிகள் பட்டியலை வெளியிட்டார்.
ஈரோடு,தூத்துக்குடி,ஸ்ரீபெரும்புதூர் ஆகிய தொகுதிகள் தமாகா கட்சிக்கு ஒதுக்கப்பட்டு இருக்கிறது. வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
தூத்துக்குடி தொகுதியில் கடந்த முறை போட்டியிட்ட எஸ் டி ஆர் விஜய் சீலன் மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று தெரிகிறது.
