அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு 5 தொகுதிகள்

நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் நீண்ட இழுபறிக்கு பிறகு அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைந்து விட்டது.
இக்கட்சிக்கு அதிமுக 5 தொகுதிகளை ஒதுக்கியது. இதற்கான ஒப்பந்தத்தில் இரு கட்சி தலைவர்களும் கையெழுத்திட்டனர்,
விருதுநகர், கள்ளக்குறிச்சி, கடலூர், திருச்சி, மத்திய சென்னை தொகுதிகள் தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது,.
விருதுநகரில் – விஜய பிரபாகரன், கள்ளக்குறிச்சியில் எல்.கே. சுதீஷ் போட்டியிடலாம் என்று தெரிகிறது. வேட்பாளர் பட்டியல் இன்று மாலை அல்லது நாளை வெளியிடப்படும்.
அதிமுக கூட்டணியில் தென்காசி தொகுதியில் புதிய தமிழகம், திண்டுக்கல் தொகுதியில் எஸ்.டி.பி.ஐ கட்சியும் போட்டியிடுகின்றன,.
