• June 8, 2025

தமிழ்நாட்டிற்கு ‘ நீட்’ தேர்வில் இருந்து விலக்கு; திமுக தேர்தல் அறிக்கையில் உறுதி

 தமிழ்நாட்டிற்கு ‘ நீட்’ தேர்வில் இருந்து விலக்கு; திமுக தேர்தல் அறிக்கையில் உறுதி

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு ஒவ்வொரு கட்சிகளும் தேர்தல் வாக்குறுதிகளை அறிக்கையாக வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் திமுக சார்பில் இன்று தேர்தல் அறிக்கையை கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னையில் வெளியிட்டார்.

அதில் இடம் பெற்று இருந்த முக்கிய வாக்குறுதிகள் விவரம் வருமாறு:-

* நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு : *திமுக அங்கம் வகிக்கும், இந்தியா கூட்டணி ஒன்றிய அரசை அமைத்தால்…

* உச்சநீதிமன்றத்தின் கிளை சென்னையில் அமைக்கப்படும்.

* புதுச்சேரிக்கு மாநிலத் தகுதி வழங்கப்படும்.

* ஒன்றிய அரசுப் பணிகளுக்கு தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவை நடத்தப்படும்.

* ஒன்றிய அரசு அலுவகங்களில் தமிழ் பயன்படுத்தப்படும்.

* அனைத்து மாநில மொழிகளது வளர்ச்சிக்கும் சம அளவு நிதி வழங்கப்படும்.

* திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கப்படும்.

* மாநிலங்கள் உண்மையான சுயாட்சி பெறும் வகையில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்படும்.

* ஆளுநர் பதவி தேவையில்லை என்றாலும், அப்பதவி இருக்கும் வரையில் மாநில முதலமைச்சர்களின் ஆலோசனை பெற்றே ஆளுநர்கள் நியமிக்கப்பட வேண்டும். ஆளுநர்களுக்கு அதிக அதிகாரம் வழங்கும் பிரிவு 361 நீக்கப்படும்.

* தாயகம் திரும்பிய இலங்கைத் தமிழர்க்கு, இந்தியக் குடியுரிமை வழங்கப்படும்.

* ரயில்வே துறைக்கு தனி நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்.

* புதிய கல்விக் கொள்கை ரத்து செய்யப்படும்.

* நாடாளுமன்ற, சட்டமன்றங்களில்  பெண்களுக்கான 33 விழுக்காடு இடஒதுக்கீடு உடனடியாக அமல்படுத்தப்படும்.

*  நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படும்.

* இந்தியா முழுவதும் உள்ள குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் மகளிர்உரிமைத் தொகை ரூபாய்.1000/ வழங்கப்படும்.

* தமிழ்நாட்டிற்கு ‘ நீட்’ தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.

* மாநில முதலமைச்சர்களைக் கொண்ட மாநில வளர்ச்சிக்கு குழு அமைக்கப்படும்.

* மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 10 லட்சம் ரூபாய் வட்டியில்லா கடன் வழங்கப்படும்.

* பா.ஜ.க அரசின் தொழிலாளர் நல விரோத சட்டங்கள் மறு சீரமைப்பு செய்யப்படும்.

* தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகள் முற்றிலுமாக அகற்றப்படும்.

* வங்கிகளில் குறைந்த பட்ச இருப்புத் தொகை இல்லாத போது விதிக்கப்படும் அபராதம் நீக்கப்படும்.

* குடியுரிமை திருத்தச் சட்டம்-2019 ரத்து செய்யப்படும்.

* ஒன்றிய அளவில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்.

* ஜி.எஸ்.டி சட்டத்தில் சீர்திருத்தம் கொண்டு வரப்படும்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *