• June 9, 2025

தி.மு.க. வேட்பாளர்களில் 11 பேர் புதுமுகம் ; தூத்துக்குடியில் கனிமொழி மீண்டும் போட்டி

 தி.மு.க. வேட்பாளர்களில் 11 பேர் புதுமுகம்  ; தூத்துக்குடியில் கனிமொழி மீண்டும் போட்டி

திமுக கூட்டணியில் தொகுதி உடன்பாடு முடிந்து தொகுதிகள் ஒதுக்கப்பட்டு விட்டன. கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியது போக மீதம் உள்ள 21 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது.

இந்த தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் பெயர்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை அறிவித்தார். அதன் விவரம் வருமாறு:-

1,தூத்துக்குடி- கனிமொழி,

2,தென்காசி -டாக்டர்.ராணி ஸ்ரீகுமார்.

3,வடசென்னை- டாக்டர் கலாநிதி வீராசாமி,

4,தென்சென்னை- தமிழச்சி தங்கபாண்டியன்,

5,மத்தியசென்னை- தயாநிதி மாறன்,

6,ஸ்ரீபெரும்புதூர்- டி.ஆர்.பாலு,

7,காஞ்சீபுரம் – ஜி.செல்வம்,

8,அரக்கோணம்- எஸ்.ஜெகத்ரட்சகன்,

9,திருவண்ணாமலை- அண்ணாதுரை

10,தர்மபுரி- ஆ.மணி

11,ஆரணி-தரணிவேந்தன்

12,வேலூர்- கதிர் ஆனந்த்,

13,கள்ளக்குறிச்சி- மலையரசன்

14,சேலம்-செல்வகணபதி

15,கோயம்புத்தூர் – கணபதி ராஜ்குமார்.

16,பெரம்பலூர் – அருண் நேரு

 17,நீலகிரி – ஆ.ராசா,

18,பொள்ளாச்சி-  ஈஸ்வரசாமி

19,தஞ்சாவூர் – முரசொலி

20,ஈரோடு-பிரகாஷ்

21,தேனி- தங்க தமிழ்செல்வன்

11 பேர் புதுமுகங்கள்

வேட்பாளர்  பட்டியலில் 11 பேர் புத்துமுகங்கள். 3 பெண்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 6 வழக்கறிஞர்கள், 2 முனைவர்கள் 2 மருத்துவர்கள், இடம் பெற்றுள்ளனர். மொத்தத்தில்  19 பேர் பட்டதாரிகள் ஆவர்,.

வாரிசுகள் அடிப்படையில் பார்த்தால் அமைச்சர் நேருவின் மகன் அருண் நேரு, அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த், மற்றும் கனிமொழி, கலாநிதி வீராசாமி, தயாநிதி மாறன், தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் மீண்டும் போட்டியிடும் வாய்ப்பு பெற்றுள்ளனர்.

தஞ்சையில் 6 தடவை  எம்.பி.யாக இருந்த எஸ்.எஸ். பழனி மாணிக்கத்துக்கு இந்த தடவைவாய்ப்பு அளிக்கப்படவில்லை. தருமபுரி தொகுதி எம்.பி. செந்தில் குமார், சேலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பார்த்திபன் ஆகியோருக்கும் இந்த முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *