தமிழக வணிகர் சம்மேளனம் அறிமுக விழா மற்றும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட நிர்வாகிகள் அறிமுகம்

தமிழக வணிகர் சம்மேளனம் அறிமுக விழா மற்றும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட நிர்வாகிகள் அறிமுகம் நிகழ்ச்சி கோவில்பட்டி தொழில் வர்த்தக சங்கக் கட்டிடத்தில் நடைபெற்றது
தமிழக வணிகர் சம்மேனன் தலைவர் ப.தமிழ்ச்செல்வம் கலந்துகொண்டு வணிகர் நலனுக்காக இயக்கம் செய்த சாதனைகளை எடுத்துக்கூறி புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்தார்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவராக சக்தி டோர்ஸ் முருகேசன், மாவட்ட செயலாளராக ஸ்ரீ வர்தினி போர்வெல் சர்வீஸ் உரிமையாளர் பி.கோபாலகிருஷ்ணன், மாவட்ட ஒருங்கிணைப்பாளராக ரேவதி, மாவட்ட சட்ட ஆலோசகராக லோகேஷ்வரர், கோவில்பட்டி தொகுதி செயலாளராக கே.கே.சி கண்ணதாசன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

மேலும் விளாத்திகுளம் தொகுதி செயலாளராக ராமர், ஓட்டபிடாரம் தொகுதி செயலாளராக ராஜு,கோவில்பட்டி தொகுதி மகளிர் அணி செயலாளராக ரதி,கோவில்பட்டி நகர தலைவராக ஏ.எஸ் கவின் டிபார்ட்மென்ட் ஸ்டோர்,பங்குத்தாரர் மது பிரகாஷ், நகர செயலாளராக பாலாஜி ஆட்டோஸ்டோர் பங்குத்தாரர் ரத்னபாண்டி, பொருளாளராக எஸ்.எம்ஆர். டிரெய்டர்ஸ் எஸ் எம் ராமச்சந்திரன்,எட்டயபுரம் நகரத் தலைவராக செல்வகுமார் ,ஒன்றிய செயலாளராக ஆர் கணபதி,ஒன்றிய தலைவராக கேசவமூர்த்தி,ஒன்றிய மகளிர் அணி தலைவராக ஜெயா,அருணா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர்
.நிகழ்ச்சியில் மாநில மகளிர் அணி ஒருங்கிணைப்பாளர் பானுமதி, திண்டுக்கல் ஜெகதா,மாநில துணை ஒருங்கிணைப்பாளர் மாரியப்பன் மற்றும் மாவட்ட மாநில நிர்வாகிகள் உறுபினர்கள் கலந்து கொண்டனர் .
