சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் விழுப்புரத்தில் ரவிக்குமார் போட்டி

திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 மக்களவை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இரு கட்சி தலைவர்களும் ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டனர்,
இதை தொடர்ந்து இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கபட்டனர். சிதம்பரம் தொகுதியில் கட்சி தலைவர் திருமாவளவன் மீண்டும் போட்டியிடுகிறார்.
இதேபோல் விழுப்புரம் தொகுதியில் மீண்டும் ரவிக்குமார் களம் காணுகிறார்.
இவர்கள் இருவரும் பானை சின்னத்தில் போட்டியிடுகிறார்கள். வேட்பாளர்கள் இருவருக்கும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மாலை மற்றும் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
