திருப்பதி காலனியில் சாலையோர ஆக்கிரமிப்புகள்

கோவில்பட்டி பசுவந்தனை சாலையில் ஆக்கி மைதானம் எதிர்புறம் உள்ள சாலையில் திருப்பதி காலனி அமைந்து உள்ளது. இந்த பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் மற்றும் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன,
இதன்காரணமாக பாதசாரிகள் பெரிதும் சிரமப்படுகிறார்கள். நகராட்சி வார்டு கவுன்சிலர் பார்வையில் படும்போது குப்பைகள் உடனே அகற்றப்பட்டு விடுகின்றன,
நிரந்தரமாக அந்த பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி குப்பை தொட்டி வைத்து தினமும் சேரும் குப்பைகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் திருப்பதி காலனியில் வாறுகால் வசதி கிடையாது. எனவே வாறுகால் அமைக்கவும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
