• June 8, 2025

பாஜக கூட்டணியில் பாமக இணைந்தது; 10 தொகுதிகள் ஒதுக்கீடு

 பாஜக கூட்டணியில் பாமக இணைந்தது; 10 தொகுதிகள் ஒதுக்கீடு

நடைபெற இருக்கும் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணியில் இணைய பாமக உயர்நிலை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இதை தொடர்ந்து இன்று (19-ந் தேதி )காலை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை , மத்திய இணை மந்திரி முருகன் ஆகியோர் தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ஆகியோரை சந்தித்தனர்.

அப்போது நடந்த பெச்சுவரத்தையில் நாடாளுமன்ற தேர்தலில் 10 மக்களவை தொகுதிககள் பாமகவுக்கு ஒதுக்குவது என்று முடிவு செய்யப்பட்டது. மேலும் ஒரு மாநிலங்களவை தொகுதி உறுப்பினர் பதவியும் தர முடிவானது.

இதற்கான ஒப்பந்தத்தில் இரு கட்சி தலைவர்களும் கையெழுத்து போட்டனர். நல்ல நேரம் பார்த்து கையெழுத்து போடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கூட்டணி குறித்து அன்புமணி ராமதாஸ் கூறுகையில், “தமிழகத்தில் மாற்றத்தை கொண்டுவர பாஜகவுடன கூட்டணி அமைத்து உள்ளோம். இந்திய பிரதமராக 3 வது முறையாக மோடி தேர்வு செய்யப்படுவார். கடந்த 10 ஆண்டுகளாக பாஜகவின் அங்கமாக பாமக இருந்து வருகிறது. த திராவிய கட்சிகள் மீது தமிழக மக்களுக்கு அதிருப்தி மனநிலை உள்ளது ” என்று தெரிவித்தார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறுகையில்,”பாமகவின் முடிவு தமிழக அரசியலை மாற்றி உள்ளது. ராமதாஸ் யோசித்த பல விஷயங்களை மோடி செயல்படுத்தி வருகிறார். தேசிய ஜனநாயக கூட்டணியில் மூத்த தலைவராக ராமதாஸ் இருப்பார். செல்லத்தில் இன்று நடைபெறும் தேர்தல் பிரசார கூட்டத்தில் ராமதாஸ், அன்புமணி கலந்து கொள்வார்கள் ” என்றார்.

முன்னதாக தைலாபுரத்தில் ராமதாஸ் மனைவி அறிமுகம் செய்து வைக்கப்பட்டபோது அண்ணாமலை மற்றும் முருகன் ஆகியோர் அவரது காலில் விழுந்து ஆசி பெற்றனர்.இன்று அதிகாலையிலேயே தைலாபுரம் தோட்டத்திற்கு வந்த அண்ணாமலை, ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் உடன் காலை உணவு அருந்தினார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *