மதிமுகவுக்கு திருச்சி தொகுதி ஒதுக்கீடு; துரை வைகோ போட்டி

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுகவுக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது. இன்று அந்த தொகுதி எது என்பது அடையாளம் கானபப்ட்டது.
இரு கட்சிகளின் முடிவுப்படி திருச்சி தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கீடு செய்யபப்ட்டது. இதற்கான உடன்படிக்கையில் திமுக தலைவர் ஸ்டாலின் மதிமுக பொதுசெயலாளர் வைகோ ஆகியோர் இன்று கையெழுத்து இட்டனர்,
திருச்சி தொகுதியில் மதிமுக சார்பாக துரை வைகோ போட்டியிடுகிறார். இதற்கான முடிவுமதிமுக ஆட்சி மன்ற கூட்ட்டத்தில் முடிவேடுக்கபப்ட்டது.
அட்சிமன்ர கூட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர்வைகோ , பொருளாளர் செந்திலதிபன், முதன்மைச் செயலாளர் துரை வைகோ, துணைப் பொதுச் செயலாளர்கள் மல்லை சத்யா, ஏ.கே.மணி, ஆடுதுறை முருகன், தி.மு.ராஜேந்திரன், டாக்டர் ரொஹையா மற்றும் ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில், திமுக தலைமையிலான இண்டியா கூட்டணியில் மதிமுக திருச்சி தொகுதியில் போட்டியிடுகிறது. இத்தேர்தலில் மதிமுக சார்பில் போட்டியிடுகிற வேட்பாளர் தேர்வு குறித்து கட்சியின் ஆட்சிமன்றக் குழுக் கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. திருச்சி மக்களவைத் தொகுதியில் மதிமுக சார்பில் கட்சியின் முதன்மைச் செயலாளர் துரை வைகோவை வேட்பாளராக போட்டியிடச் செய்வதென்று ஆட்சிமன்றக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
தொடர்ந்து வைகோ கூறியதாவது:-
தேர்தல் ஆணையத்தின் தவறான கணக்கீட்டால், மதிமுக பம்பரம் சின்னத்தை இழந்துள்ளது. எங்களது வாக்கு சதவீதமான 5.99 என்பதை 6 சதவீதமாக அவர்கள் கணக்கிட்டிருக்க வேண்டும். எனவே, தவறான கணக்கீட்டால், அங்கீகாரத்தையும், சின்னத்தையும் இழந்தோம். எனவே, டெல்லி சென்று தேர்தல் ஆணையத்திடம், ஆதாரங்களுடன் தேர்தல் ஆணையத்தை அணுகி இருக்கிறோம். வரவு செலவுக் கணக்கும், வருமான வரிக் கணக்கு என அனைத்தையும் நூறு சதவீதம் சரியாக வைத்திருக்கிறோம்.
பம்பரம் சின்னம் கிடைத்தால் மகிழ்ச்சி. அப்படி கிடைக்காதபட்சத்தில், பொதுச் சின்னங்கள் என்று தேர்தல் ஆணையத்தால், வரையறுக்கப்பட்டுள்ள பட்டியல்களில் இருந்து
வேட்புமனுவில் குறித்து கொடுக்க வேண்டும். ஒரு புதிய சின்னத்தை எப்படி மக்களிடத்தில் கொண்டுபோய் சேர்க்க முடியும். உதயசூரியன் எல்லாம் பழக்கமான சின்னம். எனவே, அதில் போட்டியிட வேண்டும் என்று கூறியதால்தான், உதயசூரியன் சின்னத்தில் கடந்தமுறை போட்டியிட்டோம்.
ஆனால், இப்படி போட்டியிடுவது சட்ட ரீதியாக தவறாக வந்துவிடும். யாராவது இது தவறான வெற்றி எனக்கூறி வழக்குத் தொடர்ந்தால், அதற்கு பதில் சொல்ல வேண்டிய நிலை வந்துவிடும். எனவே, கட்சியின் தனித்தன்மையைப் பாதுகாக்க வேண்டும் என்பதால், அதற்கேற்ற வகையில் ஒரு சின்னத்தை தேர்ந்தெடுத்து அதை மக்களிடத்தில் கொண்டு சேர்ப்போம்
இவ்வாறு வைகோ கூறினார்.
