மதிமுக நிர்வாகக் குழு கூட்டம்

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகக்குழு கூட்டம் இன்று 18.3.2024 திங்கள் கிழமை காலை 10 மணிக்கு தலைமை நிலையம் ‘தாயக’த்தில் கழக அவைத்தலைவர் ஆடிட்டர் ஆ. அர்ஜூனராஜ் தலைமையில் நடைபெற்றது.
கட்சியின் பொதுசெயலாளர் வைகோ தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் உயர்நிலைக்குழு, மாவட்டக் கழகச் செயலாளர்கள், ஆட்சிமன்றக்குழு, தணிக்கைக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மையம், ஆகிய அமைப்புக்களின் செயலாளர்கள் மற்றும் குழுக்களின் உறுப்பினர்கள், தலைமைக் கழக மற்றும் அணிகளின் செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் *ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் மாலை 3 மணி*க்கு தலைமை நிலையம் ‘தாயக’த்தில் கழக அவைத்தலைவர் ஆடிட்டர் ஆ. அர்ஜூனராஜ் தலைமையில் நடைபெற்றது.
