• June 8, 2025

கவர்னர் பதவியை ராஜினாமா செய்தார் தமிழிசை; தேர்தலில் போட்டியிட திட்டம்  

 கவர்னர் பதவியை ராஜினாமா செய்தார் தமிழிசை; தேர்தலில் போட்டியிட திட்டம்  

தெலங்கானா கவர்னர்  மற்றும் புதுச்சேரி துணைநிலை கவர்னராக  தமிழிசை சவுந்தரராஜன்பணியாற்றி வந்தார்/ இந்த நிலையில் இன்று  தனது கவர்னர் பதவியை ராஜினாமா செய்தவதாக குடியரசுத் தலைவருக்கு தமிழிசை  கடிதம் அனுப்பியுள்ளார்.

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியான நிலையில், கவர்னர்  பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ் – பாஜக கூட்டணி சார்பில் மக்களவைத் தேர்தலில் பாஜக வேட்பாளர் போட்டியிடுவதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. அதேபோல், தமிழகத்திலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 39 தொகுதிகளிலும் களம் காண்கிறது. இந்த தேர்தலில் போட்டியிட தமிழிசை சவுந்தரராஜன் பாஜக தலைமையில் விருப்பம் தெரிவித்தாக சில நாள்களுக்கு முன் தகவல் வெளியானது.

தற்போது மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பதவியை ராஜினாமா செய்து குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுக்கு தமிழிசை கடிதம் அனுப்பியுள்ளார்.

புதுச்சேரி, திருநெல்வேலி, தூத்துக்குடி அல்லது கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிகளில் ஏதேனும் ஒன்றில் தமிழிசை  போட்டியிடுவார் என்பது உறுதி.

ஓரிரு நாள்களில் தமிழகம் மற்றும் புதுவையில் போட்டியிடும் பாஜக கூட்டணியின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகவுள்ளது. தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடியில் போட்டியிட்டு திமுக கனிமொழியிடம் தோல்வி அடைந்தார். இதனைத் தொடர்ந்து, கடந்த 2019 செப்டம்பரில் தெலுங்கானா கவர்னராக தமிழிசை பொறுப்பேற்றார். பின்னர், புதுவை துணைநிலை கவர்னராக  2021-ல் கூடுதல் பொறுப்பு வகித்து வருகிறார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *