ஜாபர்சாதிக்குடன் தொடர்பில் இருந்தவர்கள் விரைவில் கைதாவார்கள் – டி.ஜெயக்குமார்

முன்னாள் அமைச்சரும் அதிமுக அமைப்பு செயலாளருமான டி.ஜெயக்குமார் சென்னையில் செய்தியாலர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் திமுகவை சேர்ந்த நிர்வாகிகள் என 300-க்கும் அதிகமானோர் அதிமுக பொதுச்செயலாளர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்து இருக்கிறார்கள்.
திமுக ஆட்சிக்கு வந்த கடந்த மூன்று ஆண்டுகளாக எதிர்க்கட்சிகள் மீது வழக்கு தொடர்வதையே வேலையாக வைத்திருக்கிறது. போதைப் பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக்குடன் தமிழக முதலமைச்சர், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி தமிழக காவல்துறை தலைவர் ஆகியோர் நெருக்கமாக புகைப்படம் எடுத்துள்ளது குறித்து விளக்கம் அளிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் தொடர்ந்து வலியுறுத்தியும் இதுவரை அவர்கள் விளக்கம் அளிக்காமல் இருக்கிறார்கள்.
மடியில் கனம் இருப்பதால்தான் அவர்களுக்கு கனம் தெரிகிறது,.
சர்வதேச அளவில் போதைப்பொருள் கடத்தியது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள ஜாபர் சாதிக்கின் முகம் மூடப்பட்டு அழைத்துச் செல்வது போல், அவருடன் தொடர்பில் இருந்தவர்களும், தமிழகத்தில் பலரையும் முகத்தையும் மறைத்து கைது செய்து அழைத்துச் செல்லும் நாள் விரைவில் வரும்.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.
