• June 8, 2025

கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் பங்குனி உத்திரம் திருவிழா தொடக்கம்

 கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் பங்குனி உத்திரம் திருவிழா தொடக்கம்

தமிழகத்தின் தென்பழனி என்றழைக்கப்படும் கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடத்தப்படும்.

இந்தாண்டுக்கான திருவிழா இன்று (மார்ச் 5) கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு திருவனந்தல் பூஜை, விளா பூஜை, காலசந்தி பூஜை நடந்தது. 

தொடர்ந்து கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், இதனை தொடர்ந்து அரோஹரா கோஷங்கள் முழங்க கொடியேற்றி மகா தீபாராதனையும் நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் கோயில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன் உட்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

விழா நாட்களில் தினமும் காலை, மாலை வேளைகளில் வள்ளி, தெய்வானையுடன் பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளி வீதியுலா நடைபெறுகிறது. \

விழாவின் சிகர நிகழ்ச்சியான  தேரோட்டம் வரும் 23ம் தேதி நடக்கிறது.  25ம் தேதி திருக்கல்யாணம் நடைபெறுகிறது

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *