ஓ.பி.எஸ். அணி முக்கிய நிர்வாகிகள் அ.தி.மு.க.வில் இணைந்தனர்

ஓபிஎஸ் அணியின் முக்கிய நிர்வாகிகள் சிலர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இன்று அதிமுகவில் இணைந்தனர்
ஓபிஎஸ் அணியின் திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளர் ஜி.சரவணன், திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளர் ஆறுமுகம் ஆகியோர் அதிமுகவில் இணைந்தனர்
மேலும் திமுக, மதிமுக நிர்வாகிகள் உள்பட 300 பேர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். அப்போது அதிமுக தலைமைக்கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்,
மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில், தொண்டர்கள் இணைப்பு காரணமாக அதிமுகவை எடப்பாடி பழனிசாமி மேலும் வலுப்படுத்தி வருகிறார்.

