நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வை தனிமைப்படுத்த பா.ஜனதா முயற்சி

பா.ஜனதா கூட்டணியில் பேச்சுவார்த்தை மேற்கொண்டுள்ள பா.ம.க., அரக்கோணம், ஆரணி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ஸ்ரீபெரும்புத்தூர், திருவள்ளூர் ஆகிய 10 நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் என வலியுறுத்துகிறது.
இதில் பாமக உறுதியாக இருப்பதால் கூட்டணி முடிவாகாத நிலையில் உள்ளதாக தெரிகிறது. பாஜக தரப்பில் மாநிலங்களவை உறுப்பினர் டிக்கெட் தர சம்மதம் தெரிவித்தாலும், மத்திய மந்திரி பதவி குறித்தான எந்தவிதமான உத்திரவாதமும் கொடுக்கவில்லை என்று தெரிகிறது..
பாமக – 7 , தமாகா – 3, ஓபிஎஸ் – 3, அமமுக – 3, புநீக – 1, இஜக – 1, தமமுக – 1, இகமமுக – 1, தெ.பார்வர்ட் பிளாக் – 1 என்று கூட்டணியில் தொகுதி ஒதுக்கீடு செய்தாலும், பாமக, அமமுக தவிர மற்ற 30 தொகுதிகளில் தாமரை சின்னத்தில் தான் போட்டியிடுவது என்பதில் பா.ஜனதா உறுதியாக உள்ளதாக கூறப்படுகிறது.
.இதற்கிடையில், பாஜக டெல்லி பிரதிநிதிகள் தேமுதிக மற்றும் புதிய தமிழகம் கட்சிகளோடு பேச்சு வார்த்தை நடத்தி அதிமுக கூட்டணியைத் தனிமைப்படுத்தவும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதிமுக கூட்டணியில் தேமுதிக, புதிய தமிழகம் கட்சிகள் மட்டும் முதற்கட்டப் பேச்சு வார்த்தை நடத்தி உள்ளனர். புரட்சி பாரதம் கட்சி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு ஒருவர் எம்.எல்.ஏ. வாக இருப்பதால் கூட்டணி மாற வாய்ப்பில்லை. மேலும் எஸ்.டி.பி.ஐ. கட்சி அதிமுக உடன் உள்ளது.
