தூத்துக்குடி தொகுதியில் மீண்டும் போட்டியிட கனிமொழி விருப்ப மனு

நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்திலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் சென்னை அண்ணா அறிவாலயத்தில்விருப்ப மனு அளிக்கலாம் என்ற அறிவிப்பை தொடர்ந்து ஏராளமானவர்கள் விருப்ப மனு அளித்து வருகிறார்கள்.
அந்த வகையில் தூத்துக்குடி தொகுதியில்திமுக துணை பொதுசெயலாளர் கனிமொழி போட்டியிட வேண்டும் என்று அமைச்சர்கள் அனிதா சம்பத், கீதாஜீவன் உள்பட பலரும் பணம் செலுத்தி மனு செய்திருந்தனர்.
இந்த நிலையில் கனிமொழி எம்.பி., தூத்துக்குடி தொகுதியில் மீண்டும் போட்டியிட இன்று சென்னை திமுக தலைமைக்கழகத்தில் விருப்ப மனு தாக்கல் செய்தார்.
கனிமொழியுடன் அமைச்சர்கள் கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர்கள் மார்க்கண்டேயன், சண்முகையா, தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் பலர் உடன் இருந்தனர்.
