தமிழகத்தில் போதைப்பொருள் வினியோகத்தை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும்; டி.ஜெயக்குமார் வலியுறுத்தல்

தமிழகத்தில் போதை பொருட்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க. இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை, மாணவரணி, மகளிர் அணி சார்பில் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பிய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டி ஜெயக்குமார் கூறியதாவது:-
திமுக ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகளில் செய்த ஒரே சாதனை என்னவென்றால் , இந்தியாவில் போதை பொருட்கள் அதிகம் உள்ள மாநிலமாக தமிழகத்தை மாற்றியது. சட்டம் ஒழுங்கு சீர்கேட்டில் முதன்மை மாநிலம் ஆக இருப்பது என்பதுதான் .திமுக அரசு செய்துள்ள சாதனை;.
தமிழகத்தில் போதை பொருள் விநியோகம் என்பது சர்வசாதாரணமாக அனைவரிடமும் கிடைக்கும் வகையில் தட்டுப்பாடு இன்றி கிடைக்கிறது. தமிழ்நாடு சட்டம், ஒழுங்கு சீர்கேடு அடைந்தது மட்டுமல்லாமல் உலகுக்கு போதை பொருளை சப்ளை செய்யும் மாநிலமாக திமுகவினர் மாற்றிவிட்டனர்.
DMK என்றால் Drug மாஃபியா கழகம் என்ற அளவுக்கு உலகம் முழுவதும் போதைப் பொருட்களை திமுக நிர்வாகிகள் விநியோகம் செய்யும் அளவுக்கு வளர்ந்து விட்டார்.
தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் போதைப் பொருட்கள் விநியோகம் சர்வ சாதாரணமாக நடகிறது., கஞ்சா அபின் பிரவுன் சுகர் போன்ற சக்தி வாய்ந்த போதை பொருட்கள் அதிகம் விநியோகிக்கும் மாநிலமாக தமிழகம் இருப்பதாலும், போதைப் பொருட்களை விநியோகம் செய்பவர்கள் ஆளும் கட்சியோடு நெருங்கிய தொடர்பில் இருப்பதால் மத்திய அரசு தலையிட்டு போதை பொருள் விநியோகத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்
இவ்வாறு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்..
தமிழகத்தில் நரேந்திர மோடி பிரசாரம் செய்வது அதிகரித்து வருவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தேசிய கட்சிகள் ஒருபோதும் தமிழக மக்களின் வாக்குகளை பெற முடியாது, தமிழக மண் ஒரு திராவிட மண் என்றார்.
கூட்டணி பற்றிய கேள்விக்குபதில் அளிக்கையில் . அதிமுக தலைமையிலான கூட்டணியில் யார் வந்தாலும் அவர்களை வரவேற்போம் என்றும் வராதவர்களை பற்றி எந்த வருத்தமும் இல்லை என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
