திமுக சார்பில் 5008 பெண்கள் பங்கேற்ற விளக்கு பூஜை

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் திமுக சார்பில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில் விளக்கு பூஜை நடைபெற்றது.
5,008 பெண்கள் விளக்கு பூஜையில் பங்கேற்றனர்.இந்த நிகழ்ச்சிக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். அமைச்சர் சேகர்பாபு குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
முன்னதாக கோவிலில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், அமைச்சர் சேகர்பாபு மற்றும் அவரது மனைவி சாமி தரிசனம் செய்தனர். திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்ட அனைத்து பெண்களுக்கும் குத்துவிளக்கு, பட்டு சேலை மற்றும் பூஜை பொருட்கள் பிரசாதமாக வழங்கப்பட்டன.
