• June 7, 2025

புதியம்புத்தூரில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது

 புதியம்புத்தூரில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது

தூத்துக்குடி மாவட்டம்,  ஓட்டப்பிடராம் சட்டமன்றத் தொகுதியில் உள்ள புதியம்புத்தூரில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 25 லட்சம் மதிப்பீட்டில் 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டப்பட்டது.

இதனை மக்கள் பயன்பாட்டிற்கு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி  திறந்து வைத்தார். 

இந்த நிகழ்வில், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன், ஓட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *