சுடுகாடு அருகே கஞ்சா விற்ற 3 பேர் சிக்கினர்

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் கேல்கர் சுப்ரமண்ய பால்சந்திரா மேற்பார்வையில் தாளமுத்துநகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜாமணி, சிறப்பு உதவி ஆய்வாளர் சுடலைமுத்து மற்றும் போலீசார் நேற்று (7.2.2024) ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
தாளமுத்துநகர் சுடுகாடு அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் தூத்துக்குடி லூர்தம்மாள்புரம், திருவள்ளுவர் நகரை சேர்ந்த நாகூர் ஹனிபா மகன் யாசர் அராபத் (25),ராஜிவ் காந்தி நகரை சேர்ந்த ரஹிம் மகன் சலிம் சாதிக் (24) மற்றும் மேட்டுப்பட்டி பகுதியை சேர்ந்த சந்தியாகு மகன் அர்னால்டு (23) ஆகியோர் என்பதும், அவர்கள் கஞ்சா விற்றதும் தெரியவந்தது.
உடனே போலீசார் கஞ்சா விற்றதாக யாசர் அராபத், சலிம் சாதிக் மற்றும் அர்னால்டு ஆகிய மூவரையும் கைது செய்து அவர்களிடமிருந்த 250 கிராம் கஞ்சா, ஒரு கத்தி,3 செல்போன்கள், 25 ப்ளாஸ்டிக் பைகளையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் இதுகுறித்து தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
