கோவில்பட்டி அருகே பயணியர் நிழற்குடை; கீதாஜீவன் திறந்து வைத்தார்
கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம் T. சண்முகபுரம் கிராமத்தில் பாராளுமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.7-லட்சம் மதிப்பீட்டில் பயணியர் நிழற்குடை நிறுவப்பட்டுள்ளது.
இந்த நிழற்குடையை.சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர்,.கீதாஜீவன் திறந்து வைத்தார்..நிகழ்விற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர்.மார்கண்டேயன் தலைமை தாங்கினார்,.
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முத்துக்குமார்,ஜவஹர் கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் நவநீதகண்ணன் விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன் கோவில்பட்டி ஒன்றிய தலைவர் கஸ்தூரிசுப்புராஜ் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் தங்கமாரியம்மாள் தமிழ்ச்செல்வன், எட்டையாபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன், விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யா அய்யன்ராஜ், ஊராட்சி மன்ற தலைவர் செல்வவிநாயகமூர்த்தி, விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.