எப்போதும்வென்றான் கிராமத்தில் கால்நடை மருந்தகம் திறப்பு
கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் எப்போதும்வென்றான் கிராமத்தில் ரூ. 48.35 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கால்நடை மருந்தக கட்டிடத்தை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் இன்று திறந்து வைத்தார்.
விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், ஓட்டப்பிடாரம் ஒன்றியக் குழு தலைவர். ரமேஷ், துணைத் தலைவரும் ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளருமான காசி விஸ்வநாதன், எப்போதும்வென்றான் ஊராட்சி தலைவர் முத்துக்குமார் மற்றும் திமுக நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்,.