திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினர்; மதுரையில் பொதுமக்களிடம் கருத்து கேட்டனர்

நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்காக தி.மு.க. சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்ட தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி.,தலைமையில் அமைக்கபட்டுள்ள குழுவினர் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.
மாவட்ட வாரியாக மக்களை சந்தித்து கருத்துக்களை கேட்டு அதன் மூலம் தேர்தல் அறிக்கை தயாரிக்க உள்ளனர்.இதன் ஒரு பகுதியாக மதுரையில் இன்று பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளை சந்தித்தனர்.
மதுரை பாண்டி கோயில் அருகே துவாரகா பேலஸ் திருமண மண்டபத்தில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பங் கேற்றனர். மாவட்டச் செயலாளர்கள் அமைச்சர் பி.மூர்த்தி, கோ.தளபதி எம்.எல்.ஏ. மற்றும் சேடப் பட்டி மணிமாறன், கம்பம் ராமகிருஷ்ணன், செந்தில்குமார் ஆகி யோர் மேற்பார்வை செய்தனர்.
கனிமொழியுடன் அமைச்சர் பழனிவேல் ராஜன், முன்னாள் எம்பி. ,டி.கே.எஸ். இளங்கோவன், தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன், தமிழ்நாடு அரசு தலைமை கொறடா கோவி. செழியன், சட்டமன்ற உறுப்பினர்கள் எழிலரசன், டாக்டர். எழிலன் நாகநாதன் மற்றும் மதுரை மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர்,.மதுரையில் பொதுமக்களிடம் இருந்து தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய கருத்துக்களைப் பெற்றனர்.
