• June 8, 2025

பெண் குழந்தைகள் சேமிப்பு திட்ட விழிப்புணர்வு முகாம்

 பெண் குழந்தைகள் சேமிப்பு திட்ட விழிப்புணர்வு முகாம்


அஞ்சல் துறையில் குழந்தைகள், முதியோர், பெண்கள் அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற வகையில் பல்வேறு சிறப்பு சேமிப்பு திட்டங்கள் உள்ளன. இதில் குறிப்பாக பார்த பிரதமரால் அறிமுகப்படுத்தப்பட்ட 10 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்புத் திட்டம் மற்றும் பெண்கள் மேன்மை சேமிப்பு பத்திரம் திட்டம் ஆகிய திட்டங்களில் சேர்ந்து பயன் பெறும் வகையில் கோவில்பட்டி, சங்கரன்கோவில் மற்றும் தென்காசி தலைமை அஞ்சலகங்களில் சிறப்பு கவுன்ட்டர்கள் நேற்று தொடங்கப்பட்டன.

தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பொது மக்கள் பயன்பெறும் வகையில் பெற்றோர்கள், குழந்தைகளுக்கான சேமிப்புத் திட்டங்களுக்கான விழிப்புணர்வு சேமிப்பு முகாம் கோவில்பட்டி அஞ்சல் கோட்டத்திற்குட்பட்ட செவன்த் டே பள்ளி, டி.டி.டி.ஏ. சிறார் பள்ளி, கோவில்பட்டி, நாகலாபுரம், மனைகாவலா தொடக்கப்பள்ளி, மேல கடையநல்லூர் ஆகிய பள்ளிகளில் நேற்று நடை பெற்றது.

செல்வமகள் சேமிப்புத் திட்டம் மற்றும் பெண்கள் மேன்மை கணக்கு தொடங்கி சேமிப்பு பத்திரம் திட்டத்தில் பொதுமக்கள் பயனடையுமாறு கோவில்பட்டி கோட்ட கோவில்பட்டி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் சு.சுரேஷ் கேட்டுக்கொண்டுள்ளார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *