• June 8, 2025

பேரிடர் பாதிப்பு: ரூ10 லட்சம் நிதி, 7 பெண்களுக்கு மாவு அரைக்கும் இயந்திங்கள்; கனிமொழி வழங்கினார்

 பேரிடர் பாதிப்பு: ரூ10 லட்சம் நிதி, 7 பெண்களுக்கு மாவு அரைக்கும் இயந்திங்கள்; கனிமொழி வழங்கினார்

,கடந்த டிசம்பர் மாதம் தூத்துக்குடியில் பெய்த வரலாறு காணாத கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், பாதிப்படைந்த  அரசு பள்ளிகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட கட்டிடங்களை மறு சீரமைக்க பல்வேறு தரப்பினரும் உதவுகரம்‌ நீட்டும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள “தூத்துக்குடி இடுக்கண் களைவோம்” என்ற புதிய இணையத்தளம் மற்றும் அதற்கான இலட்சினை (Logo) வெளியீட்டு நிகழ்ச்சி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

 முதற்கட்டமாக தூத்துக்குடி மாவட்டத்தை மறு சீரமைப்பதற்காக தனது சொந்த நிதியிலிருந்து ரூ 10 லட்சத்திற்கான காசோலையை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் திமுக துணைப் பொதுச் செயலாளரும்,தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி வழங்கினார். முன்னதாக, மழையால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடியை சேர்ந்த மாவு அரைத்து தொழில் செய்து வரும்‌ மகளிர் 7 பேருக்கு கனிமொழி எம்.பி  ஏற்பாட்டில் புதிய மாவு அரைக்கும் இயந்திரங்கள் வழங்கப்பட்டது

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், அமைச்சருமான கீதா ஜீவன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்கண்டேயன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, கூடுதல் ஆட்சியர் ஐஸ்வர்யா, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *