பிளாஸ்டிக் லைட்டர்களை தடை செய்து தீப்பெட்டி தொழிலை பாதுகாக்க கோரி ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு இன்று காலை, தீப்பெட்டி தொழிலை பாதுகாக்க கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தீப்பெட்டி தொழில் பாதுகாப்பு குழு கன்வீனர் கே.சீனிவாசன் தலைமை தாங்கினார்.
கோவில்பட்டி நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க தலைவர் எம்.பரமசிவம், ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். முன்னாள் எம்.எல்.ஏ. நூர்முகமது கண்டன உரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க செயலாளர் சேது ரத்தினம், கோவில்பட்டி தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க தலைவர் ஆர்.எஸ்.சுரேஷ், கவுன்சிலர் ஜோதிபாசு, கே.பி.ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்ட கோரிக்கைகள் விவரம் வருமாறு:-
*பிளாஸ்டிக் லைட்டர்களை தடை செய்யவேண்டும்.
*தீப்பெட்டிக்கு 12% ஜி.எஸ்.டி.வரியை 5% ஆக குறைத்திடுக.
*தீப்பெட்டி ஏற்றுமதி ஊக்கத்தொகையை அதிகப்படுத்துக.
*ஏற்றுமதி தீப்பெட்டிக்கான ஏற்றுமதி வரியை திரும்பி வழங்குவதற்கு காலம் தாழ்த்தகூடாது.
*குட்கா மற்றும் புகையிலை பொருட்களை தடை செய்தது போல் பிளாஸ்டிக் லைட்டர்களையும் தடை செய்க.
*சிறு தீப்பெட்டி தொழிற்சாலைகளுக்கு மானியத்த்துடன் மின்சாரம் வழங்குக.
*தீப்பெட்டி தொழிலுக்கு தேவையான மூலப்பொருட்களை மானிய விலையில் வழங்கிடுக.
மேற்கண்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன,
