கோவில்பட்டி புதுக்கிராமத்தில் சலவைக்கூடம் திறப்பு

கோவில்பட்டி புதுக்கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ 22 லட்சம் மதிப்பில் சலவைக்கூடம் கட்டப்பட்டுள்ளது. மோட்டார் பம்ப் செட்டுடன் கூடிய தொட்டிகள் அமைத்து கட்டப்பட்டுள்ள இந்த சலவைக்கூடத்தின் திறப்பு விழா நடைபெற்றது.
முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. கலந்து கொண்டு, சலவை கூடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். நிகழ்ச்சிக்கு சலவை தொழிலாளர் சங்க தலைவர் ரத்தினம் தலைமை தாங்கினார். செயலாளர் வேலுச்சாமி முன்னிலை வகித்தார்..தூத்துக்குடி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் சலவை தொழிலாளர் சங்கத்தினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
