கோவில்பட்டி மீனாட்சி அம்மன் கோவில் கட்டுமான பணிக்கு அக்னி நாடார் பேரவை ரூ.1 லட்சம் நன்கொடை

கோவில்பட்டி அருணாசலம் பேட்டை தெருவில் நாடார் உறவின்முறை சங்கத்திற்கு பாத்தியப்பட்ட இடத்தில் மீனாட்சி அம்மன் சமேத சுந்தரேஸ்வரர் திருக்கோவில் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது.
இந்த் கோவில் கட்டுமான பணிக்கு பலரும் நன்கொடை வழங்கி வருகிறார்கள். அந்த வகையில் அக்னி நாடார் பேரவை சார்பில் அதன் தலைவர் ஜி.சண்முகராஜா ரூ.1 லட்சம் நன்கொடை வழங்கினார்.
இந்த தொகைக்கான காசோலையை அவரிடம் இருந்து நாடார் உறவின்முறை சங்க நிர்வாகிகள் பெற்றுக்கொண்டனர்,
