• June 8, 2025

கோவில்பட்டி கதிரேசன் கோவில் தைப்பூச விழா:பால்குடம் எடுக்கும் பக்தர்கள் முன்பதிவு செய்ய வேண்டுகோள்

 கோவில்பட்டி கதிரேசன் கோவில் தைப்பூச விழா:பால்குடம் எடுக்கும் பக்தர்கள் முன்பதிவு செய்ய வேண்டுகோள்

இந்து ஆலய பாதுகாப்பு இயக்க தூத்துக்குடி மாவட்ட தலைவர் ப.பரமசிவம் கூறி இருப்பதாவது:-

கோவில்பட்டி சொர்ணமலை கதிரேசன் கோவில் தைப்பூச விழாவை முன்னிட்டு 25.1.2024 அன்று 3333 பால்குடம் பக்தர்கள் மூலமாக எடுக்கப்பட்டு கோவில்பட்டி வீதிகளில் ஊர்வலமாக சென்று வேல் வடிவான அந்த கதிர்வேல்முருகனுக்கு பால் , பன்னீர் , சந்தனம், பஞ்சாமிர்தம் உள்பட 21 அபிஷேகங்களுடன் சிறப்பு பூஜைகள் நடக்கிறது.

உலக நலன் அதிகரிக்க வேண்டியும் குறைவில்லா மழை வேண்டியும் அனைத்து மக்களும் செல்வ செழிப்போடு தொழில் செய்திடவும் மக்களின் குறைகள் அனைத்தும் நிவர்த்தி ஆகி நிம்மதியான வாழ்வை அளித்திட முருகப்பெருமானை வேண்டி சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

இதில் கலந்து கொள்ளும் முருக பக்த பெருமக்கள் அனைவரும் பால்குடம் எடுப்பதற்கு தயாராக இருக்க வேண்டும் ஆங்காங்கே ஒவ்வொரு கிராமங்களிலும் பால்குடம் எடுக்கும் பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் கோவில்பட்டி நகரிலும் ஆங்காங்கே  உள்ள திருக்கோவில்களின் அர்ச்சகர்கள் பூக்கடைகளில் அல்லது திருக்கோவில்களில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

முன்பதிவு செய்து கொள்ளும் பக்தர்களுக்கு மட்டுமே சேலை, ஜாக்கெட், சில்வர் பால்குடம் , பால், தேங்காய் பிரசாதப்பை உணவு, நீர்மோர் போன்ற அனைத்தும் வழங்கப்படும். முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே அனுமதி முன்பதிவு செய்யாத நபர்கள் எப்போதும் போல் ஆலயத்தில் தரிசனம் செய்து கொள்ளலாம். எனவே  விரைந்து உங்களது பெயரை பதிவு செய்து கொள்ளுங்கள்.

இவ்வாறு ப.பரமசிவம் கூறி இருக்கிறார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *