சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மாதிரி நேர்காணல்

தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சையது முகமது வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
காவல் சார்பு ஆய்வாளர்(சப்-இன்ஸ்பெக்டர்)) எழுத்து தேர்வு மற்றும் உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
எழுத்து தேர்வு மற்றும் உடற்தகுதி தேர்வு இரண்டிலும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதிரி நேர்காணல் நாளை வெள்ளிக்கிழமை ( 15.12.2023) தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது. நாளை பிற்பகல் 2 மணி முதல் 3.45 மணி வரை நடைபெறும்
இந்த மாதிரி நேர்காணல் தேர்வில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் கீழே உள்ள Google Forms -ஐ உடன் பூர்த்தி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
https://forms.gle/1DBETqwCos7WrT6t5
