• June 8, 2025

5 மாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கு ஒரே சமயத்தில் திருமணம்

 5 மாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கு ஒரே சமயத்தில் திருமணம்

தூத்துக்குடி சில்வா்புரம் லூசியா மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு மையம் சாா்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு கடந்த செப்டம்பா் 15 -ம் தேதி சுயம்வரம் நடந்தது. இதில் பல மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு தங்களுக்கான வாழ்க்கை துணையை தோ்வு செய்தனா் பின்னா் இரு குடும்பத்தினரும் பேச்சுவாா்த்தை நடத்தி திருமணம் செய்ய முடிவு செய்தனா்.

தோ்வு செய்த 5 ஜோடிகளுக்கு இன்று தூத்துக்குடி மறைமாவட்ட ஆயா் ஸ்டீபன் தலைமையில் ஒரே சமயத்தில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலா் முன்னிலை வகித்தாா். ஒவ்வொரு ஜோடிகளுக்கும் சுமாா் ரூ.3 லட்சம் மதிப்பிலான தங்கத்தாலி, திருமண உடைகள், மிக்ஸி, கிரைண்டா், தொலைக்காட்சி பெட்டி, பாிட்ஜ் வாஷிங் மெஷின், கட்டில், மெத்தை பீரோ மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன. 

விழாவில் அருட்பணியாளா்கள், அருட்சகோதரா்கள், அருட்சகோதாிகள், நன்கொடையாளா்கள், மருத்துவர்கள், சங்க நிா்வாக உறுப்பினா்கள், தன்னாா்வ அமைப்புகளை சோ்ந்தவா்கள் உட்பட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். விழா ஏற்பாடுகளை லூசிய இல்ல இயக்குனா் ஜான்பென்சன் பள்ளி ஆசிாியா்கள் மற்றும் பணியாளா்கள் செய்திருந்தனா்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *