மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து விஜயகாந்த் வீடு திரும்பினார்

உடல்நலகுறைவு காரணமாக கடந்த நவம்பர் மாதம் 18-ந்தேதி சென்னை போரூரில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
அவருக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன, அவர் உடல்நிலை தேறிவருகிறார் என்று விஜயகாந்த் மனைவி பிரேமலதா ஏற்கனவே அறிவித்து இருந்தார்.’இந்த நிலையில் இன்று காலை விஜயகாந்த் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார்.
இது தொடர்பாக மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் ,” சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த், பூரண குணம் அடைந்து இன்று வீடு திரும்பினார்” என்று குறிப்பிடப்படுள்ளது.
