• June 8, 2025

கோவில்பட்டி பூமாதேவி கோவிலில் சிறப்பு பூஜை

 கோவில்பட்டி பூமாதேவி கோவிலில் சிறப்பு பூஜை

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு துளசிங்க நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ அம்மா பூமாதேவி ஆலயம் குரு சித்தர் பீடத்தில் கார்த்திகை மாத கடைசி ஞாயிற்றுக்கிழமை முன்னிட்டு 108 சங்காபிஷேகம் விழா நடைப்பெற்றது.

இதனையொட்டி காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு திருப்பள்ளியெழுச்சி பூஜை நடைபெற்றது . பின் 8 மணிக்கு கணபதி பூஜை சங்கல்பம் கும்ப பூஜை சங்குக்கு பூஜை கணபதி ஹோமம் அம்பாள் மூலமந்திர ஹோமம் பூர்னாஹுதி நடைப்பெற்றது. அதன்பின் அம்பாளுக்கும் உற்சவர் அம்பாள் குருநாதர்ற்கும் 11 வகையான மஞ்சள் மா பொடி திரவியம் பால் தேன் சந்தனம் குங்குமம் வாசனைத் திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு 108 சங்காபிஷேகம் பூர்ன கும்பாபிஷேகம் நடைபெற்றது அதை தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சோடனை தீபாராதனை நடைப்பெற்றது.

சிறப்பூ பூஜைகளை லட்சுமணன் சுவாமி தலைமையில் முத்துமாரியம்மன் கோவில் அர்ச்சகர் சுப்பிரமணிய சுவாமி ஆலய அர்ச்சகர் செல்வசுப்பிரமணியன் மாரிஸ் வரன் காளி சண்டி கோவில் பூசாரி சங்கர் சாமி ஆகியோர் செய்தார்கள்.

இவ்விழாவில் சுப்பாராஜ், சங்கரேஸ்வரி, மாரியப்பன் ,ஆறுமுகம் முருகன் பாலு துவரகநாதன் விளக்கு பூஜை குழுவினர் மீனாட்சி மாரித்தாய் சாந்தி மகேஸ்வரி செல்வராணி மற்றும் ஊர் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் நிறைவாக பிரசாதம் வழங்கப்பட்டது இவ்விழா ஏற்பாடுகளை ஸ்ரீ குரு பாத தரிசன பரிபாலன அறக்கட்டளை சார்பில் செய்யப்பட்டது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *