கோவில்பட்டி வந்த சரத்குமாருக்கு வரவேற்பு

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் நேற்று கோவில்பட்டி வந்தார். திருநெல்வேலியில் இருந்து வந்த அவருக்கு இனாம் மணியாச்சி சந்திப்பு பகுதியில் சிறப்பான வரவேற்பு அளிக்கபப்ட்டது. தூத்துக்குடி வடக்கு மாவட்ட சமத்துவ மக்கள் கட்சி செயலாளர் எஸ்.ஆர். பாஸ்கரன் தலைமையில் சால்வை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
மேற்கு ஒன்றிய செயலாளர் ஆனி முத்துராஜ், கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னத்தம்பி, நகர செயலாளர் பழனி முருகன், நகர இலக்கிய அணி செயலாளர் ரஸ்னா மாரியப்பன், மாவட்ட தொண்டர் அணி செயலாளர் தனபாலன், ஒன்றிய வர்த்தக அணி செயலாளர் ஐயாதுரை, நகர மகளிர் அணி செயலாளர் கற்பக ஜோதி, ஒன்றிய மகளிர் அணி செயலாளர் சுதா காளிமுத்து, மாநில செயற்குழு உறுப்பினர் பூமி பாலகன், வார்டு செயலாளர் அண்ணாமலைச்சாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும் சிந்தலக்கரை அருகே வெம்பூரில் திருவள்ளுவர் மாவட்ட செயலாளராக இருக்கும் வக்கீல் மணலி பாலா இல்ல விழாவில் கலந்து கொண்டார். பின்னர் சென்னை புறப்பட்டு சென்றார்.
