அஞ்சல் ஊழியர்கள் வேலைநிறுத்த விளக்க கூட்டம்

அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம் சார்பில் 12-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடைபெறுகிறது. இது தொடர்பான விளக்க கூட்டம் கோவில்பட்டி தலைமை அஞ்சலகத்தில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்துக்கு சங்கத்தின் துணைத்தலைவரும், கோவில்பட்டி ஜி.வி.என்.கல்லூரி போஸ்ட் மாஸ்டருமான கிருஷ்ணசாமி தலைமை தாங்கினார். தலைக்காட்டுபுரம் அஞ்சலக போஸ்ட் மாஸ்டர் ஜெயராமன் முன்னிலை வகித்தார்.
12க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் வேலைநிறுத்தம் பற்றி விளக்கமாக பேசினார்கள். பொருளாளர் பட்டுராஜன் நன்றி கூறினார்கள் கூட்ட ஏற்பாடுகளை செயலார் உ.பிச்சையா செய்திருந்தார்.
