• June 7, 2025

8 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை; ஆட்சியர்கள் அறிவிப்பு

 8 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை;  ஆட்சியர்கள் அறிவிப்பு

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை தொடர்ந்து மழை பெய்தது. இதனால் 8 மாவட்டங்களில் பள்ளிக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டது,.

தூத்துக்குடி கலெக்டர் கோ.லட்சுமிபதி வெளியிட்ட அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

இன்று (23.11.2023) தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வரும் காரணத்தினாலும் கன மழை எச்சரிக்கை உள்ளதாலும் *பள்ளிகளுக்கு மட்டும்* இன்று 23.11.2023 ஒரு நாள் விடுமுறை விடப்படுகிறது.

உயர்கல்வி வகுப்புகளுக்கு இன்று நடைபெறவிருந்த பருவத்தேர்வுகள் மற்றொரு நாளில் நடைபெறும். அதற்கான தேதி முதன்மை கல்வி அலுவலரால் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ்வாறு கலெக்டர் கூறி உள்ளார்.

தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி சையது முகமது வெளியிட்ட செய்திகுறிப்பில் , “  கனமழை காரணமாக இன்று காலை டி.என்.பி,சி.பயிற்சி வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இன்று பிற்பகல் Constable பயிற்சி வகுப்புகள் வழக்கம்போல் நடைபெறும்”என்று கூறி உள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தை தொடர்ந்து நெல்லை, குமரி, தூத்துக்குடி, தென்காசி, நீலகிரி புதுக்கோட்டை, விருதுநகர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிப்பதாக அந்தந்த மாவட்ட கலெக்கள் அறிவிப்பு வெளியிட்டு உள்ளனர்.

மேலும் தேனி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *