• June 7, 2025

மழை தண்ணீர் தேங்கிய இடங்களை அமைச்சர் கீதாஜீவன் பார்வையிட்டு அதிரடி நடவடிக்கை

 மழை தண்ணீர் தேங்கிய இடங்களை அமைச்சர் கீதாஜீவன் பார்வையிட்டு அதிரடி நடவடிக்கை

தூத்துக்குடி மாநகராட்சியில் பல்வேறு  பகுதிகளில் மழை தண்ணீர் தேங்கி கிடக்கிறது. சரியான வாருகால் வசதி இல்லாததால் தண்ணீர் வெளியேற வழியின்றி ஒரே இடத்தில் தேங்கி கிடப்பதால் சுகாதார கேடு நிலவுகிறது. மேலும் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறார்கள்.

மாநகராட்சி மேயர் ஜெகன் ஒவ்வொரு பகுதிக்கும் நேரில் சென்று தண்ணீரை மோட்டார் மூலம் வெளியேற்ற நடவடிக்கை எடுத்து வருகிறார்.

இந்த நிலையில் மாநகராட்சி   17வது வார்டுக்கு உட்பட்ட அன்னை தெரசா நகர், ஹரிராம் நகர், ராஜீவ் நகர் மற்றும் 18வது வார்டுக்கு உட்பட்ட ராஜகோபால் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கிய இடங்களை அமைச்சரும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்ப்போது தேங்கி கிடைக்கும்  மழைநீரை வெளியேற்றும் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள துரிதப்படுத்தினார்.. அவருடன் மாநகர திமுக செயலாளர். ஆனந்தசேகரன், கவுன்சிலர்  ராமர் உள்ளிட்டோர் சென்று இருந்தனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *